புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வி. லட்சுமிபுரத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியை முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவர் பி. கே. வைரமுத்து புதல்வர் தொழிலதிபர் பி. கே. வி. குமாரசாமி தொடங்கி வைத்தார். சாலையில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து மாடுகள் ஓடின.