தனது வாக்கினை மற்றவர் செலுத்தியதால் வாக்குவாதம்

66பார்த்தது
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குப்புரெட்டிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையம் உள்ளது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் தனது வாக்கினை செலுத்த வந்துள்ளார். அப்போது தங்கள் வாக்கு ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளது என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளனர். கோபமடைந்த சந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்துள்ளார். இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் விசாரணை செய்த போது சந்திரன் என்பவரின் வாக்கினை அதே பகுதியை சேர்ந்த சந்திரமோகன் என்பவர் வாக்குப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்து கேட்ட சந்திரனிடம் சந்திரமோகன் பெயரில் நீங்கள் வாக்களித்து கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். தேர்தல் அதிகாரிகளின் குளறுபடியால் இந்த பெயர் மாற்றம் ஏற்பட்டுள்ளது என சந்திரன் வெளி நடப்பு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு மீண்டும் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவரின் வாக்கினை செலுத்தி உள்ளார்.

தனது வாக்கினை வேறொருவர் வாக்களித்து அதிகாரிகளிடம் முறையிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி