ஒரே பந்தில் ஆட்டத்தை மாற்றிய ஹர்திக் பாண்டியா (வீடியோ)

82பார்த்தது
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 16 ஓவர் முடிவில் 151/4 என்ற வலுவான நிலையில் இருந்தது. அந்த நிலையில், கிட்டதட்ட உலகக் கோப்பை இந்தியாவின் கைகளில் நழுவிச் சென்றது. அதன்பின் 17-வது ஓவரை வீசிய இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த க்ளாசனை 51 ரன்களில் வெளியேற்றினார். அந்த பந்தில் இருந்து ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. இறுதியில் இந்திய அணி கோப்பையையும் வென்றது.