கோவை: குடிப்பதை கண்டித்த மனைவியை கத்தியால் குத்திய கணவர்

1900பார்த்தது
கோவை: குடிப்பதை கண்டித்த மனைவியை கத்தியால் குத்திய கணவர்
கோவை செல்வபுரம் தெலுங்கு பாளையம் புதூரை சேர்ந்தவர் சண்முகம் (48). ஒர்க் ஷாப் ஊழியர். குடிப்பழக்கம் உடையவர். இவருக்கும், அவரது மனைவி சத்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், சம்பவத்தன்று சண்முகம் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி சத்யா கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் தகாத வார்த்தைகளால் பேசி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சத்யாவை குத்தினார். இதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவர் வலியால் அலறினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில், இந்த சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி