விருதுநகர்: பயணிகள் நிழற்குடையில் இறந்த நிலையில் ஆண் சடலம்

85பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் காசிமாயன். இவர் அலுவலகத்தில் இருந்த பொழுது கல்குறிச்சி விருதுநகர் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் 75 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அங்கு வந்து பார்த்த பொழுது இறந்தவர் அந்த பகுதியில் யாசகம் பெற்று வந்ததாகவும் உடல் நலம் பாதிப்பால் உயிர் இழந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் கிராம நிர்வாக அலுவலர் மல்லாங்கினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மல்லாங்கிணறு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி