கத்தியை காட்டி மிரட்டியவர் குண்டர் சட்டத்தில் கைது

67பார்த்தது
கத்தியை காட்டி மிரட்டியவர் குண்டர் சட்டத்தில் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - செஞ்சி சாலையில் அமைந்துள்ள ரோஷனை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில் மற்றும் மாமூல் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திண்டிவனம், ரோஷனை, போலன் தெருவை சேர்ந்த செல்வம் மகன் மணிமாறன் என்கிற ராஜ்குமார் (35). இவர் கடந்த 16/5/2024 ஆம் தேதி திண்டிவனம் - செஞ்சி ரோடு அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் மற்றும் மாமூல் கேட்டு பணியில் இருந்த சீனிவாசன் என்பவரை கத்தியால் தாக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து விழுப்புரம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தீபக் சிவாச் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பழனி ஆணைக்கிணங்க
மணிமாறன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you