கெங்கையம்மன் கோவிலில் ஆனி மாத திருவிழா!

65பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை பூக்கார தெருவில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருக்கோவிலில் 88-ஆம் ஆண்டு ஆனி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்திருவிழா ஆண்டுதோறும் பூ கரகத்துடன் கூடிய கெங்கையம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுப்பது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் அப்பகுதியில் வசிக்கும் அனைவரும் பால்குடம் எடுத்து அம்மனை பக்தி மனத்தோடு வழிபட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பல்வேறு புஷ்ப மலர்கள் மற்றும் பண மாலைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர் கெங்கையம்மனை ஏராளமான பக்தர்கள் கோவிலில் இருந்து பம்பை, மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

மேலும் நடைபெற்ற திருவிழாவில் வாலாஜாபேட்டை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you