மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி

66பார்த்தது
மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று வெங்கடேசன் நாகம்மாள் அறக்கட்டளை சார்பில், நெடுங்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023- 24 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்கள் மேற்படிப்பு படிக்க உதவும் விதமாகவும் ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, துணை சேர்மன் லட்சுமி லலிதா வேலன், ராமசாமி அறக்கட்டளை சார்பில் சீனிவாசன் குடும்பத்தினர், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you