உடுமலை பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை சங்கிலி வீதியில் உள்ள உடுமலை நாடார் உறவினர் முறையார் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. 

முன்னதாக பத்திரகாளி அம்மனுக்கு பால், தயிர், தண்ணீர், குங்குமம் உட்பட 16 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். வருகின்ற 17ஆம் தேதி அம்மன் திருவீதி உலா மற்றும் அம்மன் திருக்கல்யாணம், வானவேடிக்கை நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி