உடுமலை அமராவதி அணையில் பாசனத்துக்கு தண்ணீர் நீட்டிப்பு

63பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் மூலம் திருப்பூர் கரூர் மாவட்டத்தில் உள்ள 54, 637 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகின்றன அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் புதிய ஆயக்கட்டு பாசனபகுதிகளில்
உள்ள 25, 529 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த செப்டம்பர் 27 முதல் பிப்ரவரி 9 வரை பிரதான கால்வாயில் வினாடிக்கு 440 கன அடி வீதம் 135 நாட்களில் 70 நாட்கள் தண்ணீர் திறப்பு 65 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற அடிப்படையில் 26112 மில்லியன் கன அடி நீர் அரசு உத்தரவுபடி பணி வழங்க தண்ணீர் வழங்கப்பட்டது.

மேலும் பாசன நிலங்களில் உள்ள நெல் கரும்பு உள்ளிட்ட நிலைப்பயிர்களை காக்கும் வகையில் கூடுதல் நீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது. பாசன காலங்களில் இடையில் பெய்த பருவமழைகள் காரணமாக அனுமதிக்கப்பட்ட அளவு நீர் முழுமையாக வழங்கப்படாத நிலையில் விவசாயிகள் பாசன காலத்தை நீடிக்க கோரிக்கை விடுத்த நிலையில் மேலும் 15 நாட்கள் பிரதான கால்வாயில் இரு சுற்றுகளில் நீர்
வழங்கபடும் என்று தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி