உடுமலை அருகே திருசப்பார பூஜை.. பக்தர்கள் பங்கேற்பு

60பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், மஹா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இந்தாண்டு மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று முன்னோர்கள் அறிவுறுத்தலின் பேரில் பூலாங்கிணர் கிராமத்தில், பாரம்பரிய முறையில், திருச்சப்பரம் தயார் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. 

பின்னர் மேளதளங்கள் மங்கள வாத்தியம் முழங்க பூலாங்கிணர், ராகல்பாவி, ஆர். வேலூர் கிருஷ்ணாபுரம், வாளவாடி வழியாகத் திருச்சப்பர ஊர்வலம் நடைபெற்றது. கிராம மக்கள், வேளாண் வளம் செழிக்க, தானியங்கள், வாழைப்பழங்கள், உப்பு, நெல், கொண்டைக்கடலை, மக்காச்சோளம் மற்றும் பல்வேறு விவசாய விளைபொருட்களை சப்பாரத்தின் மீது வீசியும், சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இதற்கிடையில் வாளவாடியில் நடைபெற்ற திருச்சப்பர சிறப்பு பூஜையில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். பின்னர் திருமூர்த்திமலைக்கு திருச்சப்பரம் சென்ற நிலையில் சிறப்புப் பூஜை, முதல் நான்கு கால யாகப் பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி