தாராபுரம் அருகே நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
தாராபுரம் அருகே சின்னக்காம்பாளையம் பகுதியில் பழமை வாய்ந்த தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கோவில் திருவிழா கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதன் ஒரு நிகழ்வாக சின்னக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அமராவதி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து நேர்த்திக்கடனை இன்று செலுத்தினர்.