அதிமுக புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர 22வது வட்ட கழகம் தில்லை நகர் பகுதி சார்பாக புதிய உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் விழா திருச்சி தில்லை நகர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தில்லை நகர் பகுதி செயலாளர் எம். ஆர். முஸ்தபா தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்திட்டங்களை பார்த்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்வதற்காக மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்டனர்