தொழிற்சாலையில் மயங்கி விழுந்த பெண் மரணம்

1056பார்த்தது
தொழிற்சாலையில் மயங்கி விழுந்த பெண் மரணம்
தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலையில் பணியில் இருந்த பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  


இதுகுறித்துப போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி நயினார்புரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மனைவி கற்பகவல்லி (39), இவர் தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஒரு உலர் பூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று அவர் பணியில் இருந்தபோது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தாராம்.


உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :