தாமிரபரணி ஆற்றில் குளித்த வாலிபர் திடீர் மாயம்

79பார்த்தது
தாமிரபரணி ஆற்றில் குளித்த வாலிபர் திடீர் மாயம்
ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மாயமான வாலிபரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகரைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் முகேஷ் கண்ணன் (20). இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் இன்று மதியம் 2 மணி அளவில் ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். சேர்மன் கோவில் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற அவர் மாயமாகி விட்டார்.

அப்போது உடன் குளித்துகொண்டிருந்த நண்பர்கள் அவரை தேடியும் கண்டுபிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து ஏரல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து முகேஷ் செல்வனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும உறவினர்கள் சம்பவ இடத்தில் வந்தனர். இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி