திருச்செந்தூர்: ஊருக்குள் வராத அரசு பஸ்களை சிறைபிடித்த பொதுமக்கள்

73பார்த்தது
திருச்செந்தூர்: ஊருக்குள் வராத அரசு பஸ்களை சிறைபிடித்த பொதுமக்கள்
நெல்லை மற்றும் திருச்செந்தூரில் இருந்து வரும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியில் சென்றன. இது குறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் ஊருக்குள் செல்லாமல் வந்த பஸ்களை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே நேற்று முன்தினம் இரவு அரசு பஸ்களுக்கு அபராதம் விதித்தபோதும், இது குறித்து அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காத அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி