தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து விமானத்தில் வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், டி.ஆர்.பி. ராஜா, மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவதி, ஏடிஜிபி ஜெயராமன், டிஐஜி மூர்த்தி, எஸ்பி ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி நகர உதவி கண்காணிப்பாளர் மதன், மற்றும் திமுக மாநகர செயலாளர் எஸ்.ஆர். ஆனந்த சேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், ராஜா, நெல்லை அப்துல் வகாப், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ஜோயல், திமுக கட்சியினர் விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது விமான நிலையத்திலிருந்து நின்று கொண்டிருந்த கட்சி தொண்டர்களிடம் நடந்து சென்று சால்வை மற்றும் பூக் கொத்து வாங்கி சென்றார். அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். பின்னர் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி மறவன்மடத்தில் உள்ள சத்யா ரிசார்ட் தங்கும் விடுதியில் ஓய்வெடுக்க சென்றார்.