பணி நிரந்தரம் தொடர்பாக தற்காலிக ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசுக்கு ஒரு வார கால சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (பிப்ரவரி 19) உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்துள்ளார்.