தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா மழவாரயநத்தம் கிராமத்தில் நீண்ட நாட்களாக சுடுகாட்டிற்கு செல்கின்ற வழியில் குளத்தை தாண்டி செல்ல பாலம் அமைக்கப்படாமல் உள்ளது.
இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பவானி வேல்முருகன் நேற்று (பிப்ரவரி 13) பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியின் போது பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.