அக்னீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர நிறைவு விழா.
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர நிறைவு விழா.
திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ சௌந்தர்ய நாயகி உடனுறை ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர நிறைவு விழா புதன்கிழமை (மார்ச். 27) நடைபெற்றது. இக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவத்தலம் ஆகும். கோயிலில்பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றன. நிறைவு விழாவை முன்னிட்டு புதன்கிழமை மாலை கலசங்களில் புனித நீர் நிரப்பி, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தானம், இளநீர், பஞ்சாமிர்தம், பழங்கள் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருக்கண்ணபுரம் டி. எஸ். கனகராஜன் - டி. எஸ். கே. சௌரிராஜன் குழுவினரின் நாகஸ்வர கச்சேரி நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வேலு. ராமதாஸன் குடும்பத்தினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ சௌந்தர்ய நாயகி உடனுறை ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர நிறைவு விழா புதன்கிழமை (மார்ச். 27) நடைபெற்றது. இக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவத்தலம் ஆகும். கோயிலில்பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றன. நிறைவு விழாவை முன்னிட்டு புதன்கிழமை மாலை கலசங்களில் புனித நீர் நிரப்பி, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தானம், இளநீர், பஞ்சாமிர்தம், பழங்கள் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருக்கண்ணபுரம் டி. எஸ். கனகராஜன் - டி. எஸ். கே. சௌரிராஜன் குழுவினரின் நாகஸ்வர கச்சேரி நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வேலு. ராமதாஸன் குடும்பத்தினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.