காரைக்கால் மாவட்டத்தில் உள்ள
அதானி நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் துறைமுகத்தில் தொழிலாளர் விரோதப் போக்கு நீடித்து வருவதாகவும் துறைமுகத்தில் உள்ளூர் தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கை கைவிட வலியுறுத்தியும் காரைக்கால் துறைமுக வாயிலில் அமர்ந்து காரைக்கால் துறைமுக ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.