மியாட் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு

160506பார்த்தது
மியாட் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு
சென்னை மியாட் மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் தொண்டர்கள் அதிகளவில் குவிய வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை அடுத்து, மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விஜயகாந்த் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை காலை 9 மணியளவில் மருத்துவ அறிக்கை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், விஜயகாந்த் வீட்டிற்கு தேமுதிக நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக நேற்று முன்தினம் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி