வேலூர் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. வேலூர், மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். நேற்று நடந்த சந்தையில் ஏலத்திற்கு, 11 ஆயிரம் கிலோ தேங்காய் பருப்பு வரத்தானது. அதிகபட்சமாக கிலோ, 142.25 ரூபாய், குறைந்தபட்சமாக, 128.19 ரூபாய், சராசரியாக, 140.11 ரூபாய்க்கு ஏலம் போனது.