மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம், கரடிக்கல் கிராமத்தில் இன்று (மார்ச். 24) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அவர்கள் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 48 பயனாளிகளுக்கு 4.34 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் அவர்கள், வருவாய் கோட்டாட்சியர் ராஜகுரு அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.