கிருஷ்ணகிரி அருகே அழுகிய நிலையில் முதியவர் உடல் மீட்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள தோரிப்பள்ளி அடுத்த கானலட்டி பகுதியை சேர்ந்தவர் முனியப்பா (65). இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 21-ஆம் தேதி அன்று முனியப்பா வீட்டில் இருந்து வெளியே சென்றார் பின்னர் வீட்டிற்கு வரவில்லை.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் கானலட்டி வனப்பகுதியில் உள்ள ஏரி அருகே முனியப்பா அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் உடலை மீட்டு வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்கள்