மண் அள்ளிய பொக்லைன் எந்திரம் பறிமுதல்- போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் போலீசார் பாம்பாறு ஆற்றங்கரை ஓரம் ரோந்து ணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அங்கு இரண்டு பேர் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி கொண்டு இருந்த போது போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதை அடுத்து போலீசார் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் அசோக், பொக்லைன் உரிமையாளர் ரவி என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.