கரூர் அருகே வாலிபர் திடீரென உயிரிழப்பு

5396பார்த்தது
கரூர் அருகே வாலிபர் திடீரென உயிரிழப்பு
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகாவிற்குட்பட்ட கடம்பங்குறிச்சி அருகே உள்ள சின்னவபாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 32). இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் அப்பகுதியில் உள்ள பந்தல் குடோன் அருகே தூங்கி கொண்டிருந்தார். இதையடுத்து ராஜேஸ்வரி தனது கணவர் ராமச்சந்திரனை எழுப்பியபோது அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, ராமச்சந்திரன் எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :