அச்சரப்பாக்கம் பேரூர், கருங்குழி பேரூர் திமுக பாக முகவர்கள் மற்றும் பாக நிலை குழு உறுப்பினர்கள் கூட்டம் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் பங்கேற்பு.
காஞ்சி தெற்கு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூர், கருங்குழி பேரூர் திமுக சார்பில் பேரூர் கழகச் செயலாளர்கள் எழிலரசன், சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் அச்சரப்பாக்கம், கருங்குழி ஆகிய பகுதிகளில் திமுக பாக முகவர்கள், பாக நிலைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளர் சாரதிமணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு வரும் சட்ட மன்ற தேர்தலின் போது திமுகவின் வெற்றியை உறுதி செய்ய எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும், அதிக அளவிலான உறுப்பினர்களின் சேர்க்கை சேர்ப்பது குறித்தும், கிராமங்கள் தோறும் திமுகவின் வளர்ச்சிப் பணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தேர்தலின் போது வெற்றியை உறுதி செய்யவேண்டும் என விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர்கள் நந்தினி, தசரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.