வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் விளையாட்டு போட்டிகள்

74பார்த்தது
மதுராந்தகம் அருகே SRM வேளாண் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்



செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த பாபுராயன் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள எஸ். ஆர். எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான வேளாண் கல்லூரிகள் பங்கு பெறும் விளையாட்டுப் போட்டிகள் இன்றுலிருந்து ஆரம்பமாகி அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது.

இதில் மாநில அளவில் பத்திற்கும் மேற்பட்ட வேளாண் கல்லூரிகள் பங்கு கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.

இந்நிகழ்வினை எஸ் ஆர் எம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பதிவாளர் முனைவர். சு. பொன்னுசாமி அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

எஸ் ஆர் எம் ஐ எஸ் டி பல்கலைக்கழகத்தின் விளையாட்டு துறை இயக்குனர் முனைவர் ர. மோகன கிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார்.

எஸ். ஆர். எம். வேளாண் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. ஜவஹர்லால் அவர்கள் விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் கைப்பந்து, கூடைப்பந்து , கபடி என 13 விதமான போட்டிகள் இரு பாலருக்குமாக நடைபெறுகிறது. இதன் நிறைவு விழாவானது வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
Job Suitcase

Jobs near you