சென்னையில் அமெரிக்க டாலர் பறிமுதல்

75பார்த்தது
சென்னையில் இருந்து அபுதாபிக்கு, விமானத்தில் கடத்த முயன்ற ரூ. 18 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் வெளிநாட்டுப் பணம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.

சூட்கேஸ் ரகசிய அறைகளுக்குள் மறைத்து வைத்திருந்த, வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், கடத்தல் பயணியை கைது செய்து விசாரணை.

சென்னையில் இருந்து அபுதாபி செல்லும், ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக்கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து, விமானத்திற்கு அனுப்பி கொண்டு இருந்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த முகமது பைசல் (30) என்பவர், இந்த விமானத்தில் சுற்றுலா பயணியாக அபுதாபி செல்ல வந்திருந்தார். அவருடைய சூட்கேசை, பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதிக்க போது, சூட்கேஸ் ரகசிய அறைக்குள், கட்டுக்கட்டாக, அமெரிக்கா டாலர் கரன்சி மறைத்து வைத்துள்ளது தெரிய வந்தது. இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், முகமது பைசல் சூட்கேஸை திறந்து பார்த்து சோதனையிட்டனர். அதனுள் ரூ. 18 லட்சம் மதிப்புடைய, அமெரிக்க டாலர் வெளிநாட்டு, பணம் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக முகமது பைசல் விமான பயணத்தை ரத்து செய்து முகமது பைசாவை விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you