கள்ளக்குறிச்சி: ஆற்று திருவிழாவிற்கு 270 போலீசார் பாதுகாப்பு

68பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை மஞ்சுவிரட்டு உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கிராமங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடினர். தொடர்ந்து இன்று (18ம் தேதி) ஆற்றுதிருவிழா கொண்டாடப்படுகிறது. 

மாவட்டத்தில் திருக்கோவிலூர், மணலூர்பேட்டை பகுதியில் உள்ள தென்பெண்ணையாறு, கச்சிராயபாளையம் கோமுகி ஆறு ஆகிய பகுதிகளில் ஆற்றுதிருவிழா கொண்டாடப்படுகிறது. 

இதனையொட்டி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆற்றுதிருவிழாவிற்கு வருகை புரிவர். மேலும், சுவாமிகளின் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும். ஆற்றுதிருவிழாவில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் எஸ்.பி., ரஜத்சதுர்வேதி மேற்பார்வையில் காவல்துறை மூலம் பாதுகாப்புப் பணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதில் ஏ.டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் 3 டி.எஸ்.பி.கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 36 சப்இன்ஸ்பெக்டர்கள், 220 காவல்நிலைய மற்றும் ஆயுதப்படைப் போலீசார் என மொத்தம் 270 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி