அழைப்பிதழ் கொடுத்து விழிப்புணர்வு

571பார்த்தது
அழைப்பிதழ் கொடுத்து விழிப்புணர்வு
வெள்ளித்திருப்பூரில் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு கொண்ட தாம்பூலத் தட்டுடன் அழைப்பிதழ் வைத்து வாக்காளர்களிடம் வரும் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அந்தியூர் தாலுாகாவுக்கு உட்பட்ட வெள்ளித்திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் வீஏஓ. , தமிழ்செல்வி, தாம்பூலத் தட்டில் தேர்தலுக்கான அழைப்பிதழ் வைத்து, கட்டாயம் வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்தார். இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் மக்களவைத் தேர்தல் திருவிழா அருகாமையில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஏப். 19, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் நடக்கிறது.
இந்நாளில் தங்கள் சுற்றும் சூழ வருகை தந்து தவறாமல் வாக்கினை பதிவு செய்து 100 சத வாக்குப்பதிவு நடத்தி உரிமையை நிலைநாட்டிட வேண்டுகிறோம் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தொடர்புடைய செய்தி