டிட்டோஜாக் கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டம்

50பார்த்தது
தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90% ஆசிரியர்களை பாதிக்கின்ற பதவி உயர்வை பறிக்கின்ற அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 03. 07. 24 தற்செயல் விடுப்பு எடுத்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் திண்டுக்கல் CSI நடுநிலைப்பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு பெண் ஆசிரியர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you