வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு!
திருப்பூரைச் சேர்ந்த மணிகண்டன் (31) சிங்காநல்லூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து பங்குச்சந்தையில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும் பணியை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவருடைய வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது கதவு திறக்கப்படாமல் இருந்ததால் வீட்டின் உரிமையாளர் இதுகுறித்து மணிகண்டனின் தாயாருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார் தகவலின் பெயரில் அவர் கோவைக்கு வந்து வீட்டின் கதவை உடைத்த போது அழுகிய நிலையில் மணிகண்டன் பிணமாக கிடந்தது தெரிய வந்தது இது பற்றிய தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.