ராகுலுக்கு இனிப்பான வெற்றி உறுதி: முதல்வர் நெகிழ்ச்சி ட்வீட்

59பார்த்தது
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் ஜூன் 4 ஆம் தேதி இந்தியா ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியைத் தரும் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் ஓர் இனிப்பகத்தில் மைசூர் பாக் வாங்கினார். கடை அவர் சென்ற சாலையின் எதிர்புறத்தில் இருந்ததால் ராகுல் காந்தி சாலைத் தடுப்பைத் தாண்டிச் சென்று கடையில் இனிப்புகளை காசு கொடுத்து வாங்கிக் கொண்டு அதற்கான சில்லறையையும் பெற்றுக் கொண்டார். பின்னர் பிரச்சாரத் திடலுக்கு ராகுல் வந்தபோது அவரை முதல்வர் ஸ்டாலின் அரவணைத்து வரவேற்றார். அப்போது அவரிடம் ராகுல் காந்தி இனிப்புகளைக் கொடுத்தார்.

இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் அதனை டேக் செய்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை பகிர்ந்த ட்வீட்டில், அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்! எனது சகோதரரின் இனிய செயலால் நான் பரவசமடைந்தேன். ஜூன் 4 ஆம் தேதி இந்தியா அவருக்கு இனிப்பான வெற்றியைத் தரும்” என்று பதிவிட்டுள்ளார். அது இந்திய மக்கள் மற்றும் இண்டியா கூட்டணி எனப் பொருள்படும் வகையில் அமைந்துள்ளது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்! Touched and overwhelmed by the 'sweet gesture' from my brother @RahulGandhi. On June 4th, #INDIA will surely deliver him a sweet victory!

தொடர்புடைய செய்தி