வைகாசி மாத பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு!

75பார்த்தது
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு!
வைகாசி மாத சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று(மே 14) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று பூஜைகள் எதுவும் நடைபெறாது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளது. இதற்காக நாளை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமய பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்.
Job Suitcase

Jobs near you