வைகாசி மாத பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு!
வைகாசி மாத சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று(மே 14) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று பூஜைகள் எதுவும் நடைபெறாது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளது. இதற்காக நாளை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமய பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்.