சிவகாசி: திருக்கல்யாண விழா. திரளான பக்தர்கள் பங்கேற்பு....

1107பார்த்தது
சிவகாசி அருகே திருத்தங்கல், ஸ்ரீகருநெல்லிநாதர் சுவாமி - ஸ்ரீமீனாட்சி அம்பாள் திருக்கல்யாணம் விழா. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில் உள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீகருநெல்லிநாதர் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து, ஸ்ரீகருநெல்லிநாதர் சுவாமி - ஸ்ரீமீனாட்சி அம்பாள் திருக்கல்யாணம் விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாண சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீகருநெல்லிநாதர் - ஸ்ரீமீனாட்சி அம்பாள் சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தேவி மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி