சிவகாசி: பல்லாக்கில் அப்பனும், அம்பாளும் வீதி உலா...

67பார்த்தது
சிவகாசி: பல்லாக்கில் அப்பனும், அம்பாளும் வீதி உலா...
சிவகாசி சிவன் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கோலாகலம்.
'பல்லக்கில்' எழுந்தருளிய ஸ்ரீவிசாலாட்சி அம்மன்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிவன் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 6ம் நாள் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமிக்கும், ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமியும், ஸ்ரீவிசாலாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பின்னர், ஸ்ரீவிசாலாட்சி அம்மன் 'பல்லக்கில்' எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு, ஸ்ரீவிசாலாட்சி அம்மன் 'ரிஷப' வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து கழுவேற்றம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி