விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவாரம்பட்டி கல்யானசுந்தரனார் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (43), இவர் பெரியகடை பஜாரில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடையின் அருகே வழக்கறிஞர் முரளி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. கடையில் உள்ள அடுப்பு புகை முரளி வீட்டிற்கு செல்வதால் பாதிப்பு இருப்பதாக இருவரம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். நேற்று கடையில் இருந்த வெங்கடேஷ் முரளி தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ் கொடுத்த புகாரில் இராஜபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.