மின்னல் தாக்கி 3 ஆடுகள் பலி: விவசாயி படுகாயம்

58பார்த்தது
மின்னல் தாக்கி 3 ஆடுகள் பலி: விவசாயி படுகாயம்
விக்கிரவாண்டி அருகே மின்னல் தாக்கி வயலில் மேய்ந்த 3 ஆடுகள் இறந்தன. விவசாயி படுகாயம் அடைந்தார். விக்கிரவாண்டி அடுத்த கல்யாணம் பூண்டியைச் சேர்ந்தவர் ஏழுமலை, (52); விவசாயி. நேற்று (செப்.,28) இவர் முட்டத்துார் பகுதியில் அவரது விவசாய நிலத்தில் 3 ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
மதியம் 1: 30 மணியளவில் திடீரென மின்னல் இடியுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது தாக்கிய மின்னலில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த 3 ஆடுகளும் இறந்தன. ஏழுமலை படுகாயமடைந்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். கஞ்சனுார் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி