கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட, வி. நெற்குணம் மற்றும் முட்ராம்பட்டு பகுதியைச் சேர்ந்த 50 பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, மாவட்ட செயலாளர் செயலாளர் சண்முகம் முன்னிலையில் நேற்று (அக் 1)அ. தி. மு. க. , வில் இணைந்தனர். சக்கரபாணி எம். எல். ஏ. , வானுார் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கண்டமங்கலம் ஒன்றிய பேரவை செயலாளர் முருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.