விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி ஊராட்சியில் வருகின்ற இரண்டாம் தேதி திருச்சி பகுதியில் ஐஜேகே சார்பில், தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் மாநாடு நடைபெற உள்ளதை ஒட்டி, வீடு வீடாக சென்று விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் மாநாட்டிற்கான அழைப்பிதழை இன்று வழங்கினார்.