ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் கிராமம் ராஜேஷ் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (42). அங்குள்ள தனியார் கம்பெனியில்
வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
குடும்பப் பிரச்சினை காரணமாக இன்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.