வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்
ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் பிலிப், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோவேந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்பாட்டத்திற்கு மாநில செய்தி தொடர்பாளர் பாவலன், மாநில அமைப்பு செயலாளர் நீலச் சந்திரகுமார், முன்னாள் மண்டல செயலாளர் கவுதம் கோபு, வேலூர் நாடாளுமன்ற செயலாளர் செல்ல பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இதில் வாக்கு சீட்டு முறையை அமல்படுத்தகோரி கோஷம் எழுப்பினர்.