திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்களும், ஆதார் பதிவு அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.