திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கல் நகரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கடந்த சில தினங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகின்றது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதில் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.