திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் உள்ள தனியார் தோட்டத்தில், தேங்காய் பறிப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தாமஸ் கென்னடி என்பவர் கூலித் தொழிலாளிகளில் ஒருவராக வந்துள்ளார்.
தேங்காய் பறிக்கும் போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவரை, ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் கனியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.