உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் லட்சுமணன் வயது 75 இவர் நாமக்கல்லில் நடைபெற்ற தனது உறவினர் இல்ல சுப நிகழ்ச்சிக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவருடைய மகன் அழகேசன் இது குறித்து உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் முதியவர் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.