பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை அணியின் சார்பில் திருச்சி மன்னார்புரம் விழிஇழந்தோர் பள்ளியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார்.
கோட்ட பொறுப்பாளர் நெப்போலியன் , செயற்குழு உறுப்பினர் சார்லஸ், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் மரியா வின்சென்ட் , பொன்மலை மண்டல் தலைவர் அருண் , சிறுபான்மை அணி பொதுச் செயலாளர் அந்தோணிசாமி, மண்டல் பொருளாளர் க்ளாரின் உள்ளிட்டவர் முன்னிலையில் அனைவருக்கும் கிறிஸ்மஸ் கேக்குடன் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பெரம்பலூர் மாவட்ட பார்வையாளர் இல. கண்ணன், ஓபிசி மாநிலத் துணைத் தலைவர் எஸ்பி சரவணன் , வழக்கறிஞர் அணி முத்து மாணிக்கவேலன் , சந்துரு, குமரன், மகளிர் அணியை சேர்ந்த ரேகா, லீமா சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.