சாகசம் செய்த இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு

1073பார்த்தது
சாகசம் செய்த இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்- துறையூர் சாலையில் இளைஞர் ஒருவர் தனது மாற்றம் செய்யப்பட்ட டி. வி. எஸ் 50 இருசக்கர வாகனத்தில் படுத்தவாறு ஓட்டி சாகச பயணத்தில் ஈடுபட்டதுடன் அதை வீடியோவாகப் பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பதைப்பதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சியை கண்ட பலரும் அதிர்ந்துள்ளனர்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளிக் குவிக்க தனது உயிரை பணயம் வைத்து சாகசத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் சாகத்தில் ஈடுபட்ட நபர் முசிறியை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
சாலை விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட நிவாஸ் என்ற இளைஞர் மீது புலிவலம் காவல்துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி